புதுடெல்லி, டிச. 15–
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிற்றுண்டி விடுதியில் நுழைந்து துப்பாக்கி முனையில் பலரை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் எதிரொலியாக ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சிட்னியில் தீவிரவாதிகள் அட்டூழியம் எதிரொலி: இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் போட்டியில் விளையாடுவதவற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் முடிந்து விட்டது. 2–வது டெஸ்ட் பிரிஸ்பேனில் வருகிற 17–ந் தேதி தொடங்குகிறது.
பிரிஸ்பேனில் இருக்கும் இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறியதாவது:–
சிட்னியில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து நாங்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் தொடந்து தொடர்பு வைத்துள்ளோம். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
பிரிஸ்பேனில் தங்கி இருக்கும் வீரர்கள் இயல்பான நிலையில் உள்ளனர். இந்திய வீரர்களது பாதுகாப்பை அதிகப்படுத்தி இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top