சென்னை, டிச. 16–
சென்னை விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு நவீனப்படுத்தப்பட்டு உள்ளது. உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்கள் பல ஆயிரம் கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு பல்வேறு வசதிகளுடன் கண்ணாடி மாளிகை போல காட்சியளிக்கும் விமான நிலையத்தில் மேற்கூறை (பால் சீலிங்), கண்ணாடி உடைந்து விழுந்தது. கண்ணாடி கதவு மற்றும் டைல்ஸ் கற்கள் திடீர் திடீரென உடைந்து விழுகின்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலை 2 மணி அளவில் உள்நாடு மற்றும் வெளிநாடு முனையத்திற்கு நடுவில் வருகை பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பயணிகள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
28–வது ஓடுதளம் அருகில் நடந்த இந்த சம்பவம் 31–வது முறையாக நடந்துள்ளது. மேற்கூரை இடிந்து விழுந்த பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மட்டும் பார்த்தனர். விமான நிலைய அதிகாரிகள் யாரும் வரவில்லை.
விமான நிலையத்தில் அடிக்கடி நடைபெறும் இது போன்ற சம்பவத்தால் பயணிகள் நடமாடவே அச்சப்படுகிறார்கள். எந்த நேரத்தில் எது உடைந்து விழுமோ என்ற கலக்கத்தில் பயணிகள் கடந்து செல்கிறார்கள்.
0 comments :
Post a Comment