புதுடெல்லி, டிச.16- 

இந்தியாவில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்'-தின் சோதனை ஓட்டத்தை பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பரிகர் விசாகப்பட்டினத்தில் நேற்று தேசியக் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இந்த சோதனை ஓட்டத்தில் கப்பல் நீரில் மூழ்கும் திறன், கப்பலில் உள்ள ஆயுதங்களின் தாக்கும் திறன் மற்றும் கப்பலின் அனைத்து சாதனங்களும் பரிசோதிக்கப்படும். 
இந்தியாவில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்: சோதனை ஓட்டம் தொடங்கியது
6000 டன் எடை வரை சுமந்து செல்லும் இந்த அதி நவீன நீர்மூழ்கிக் கப்பலில், இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 83 மெகாவாட் திறனுள்ள அழுத்த நீர் உலை உள்ளது. 3500 கிலோ மீட்டர் வரை கண்டம் விட்டு கண்டம் பாயும் கே-4 எனும் நான்கு அணுசக்தி ஏவுகணைகள் அல்லது 700 கிலோ மீட்டர் வரை இலக்கைத் தாக்கி அழிக்கும் போ-5 எனும் 12 ஏவுகணைகளை சுமந்து செல்லும் ஆற்றலை இந்த நீர்மூழ்கி கப்பல் தன்னுள் கொண்டது. 

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் இன்னும் இரண்டு வருடங்களில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் பயன்பாட்டுக்கு வரும். அப்படி வரும் நிலையில், உலகில் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை வடிவமைத்து, உருவாக்கி அதைப் பயன்படுத்தும் ஆறு நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். 

இந்தியாவிடம் தற்போது இருக்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சக்ரா அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறனற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top