கவுகாத்தி, நவ. 30-
அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்று வரும் உள்துறை மாநாட்டில், பங்கேற்ற சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா இன்று பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றும் போதும் தூங்கினார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் விழிப்புடன் பணியாற்றவேண்டும் என்று மோடி பேசிக்கொண்டிருந்தபோது, சின்கா தனது இரு விழிகளையும் மூடிக்கொண்டு உறக்கத்தில் இருந்தார். இக்காட்சிகளை தொலைக்காட்சி ஊடகங்கள் படம்பிடித்து காட்டியுள்ளன. நாடு முழுவதும் உள்ள முக்கிய காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் ரஞ்சித் சின்கா தொடர்ந்து இரண்டாவது நாளாக இவ்வாறு நடந்து கொள்கிறார்.
முன்னதாக நேற்று இம்மாநாட்டில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசும்போதும் ரஞ்சித் சின்கா தூங்கியது குறிப்பிடத்தக்கது.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்று வரும் உள்துறை மாநாட்டில், பங்கேற்ற சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா இன்று பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றும் போதும் தூங்கினார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் விழிப்புடன் பணியாற்றவேண்டும் என்று மோடி பேசிக்கொண்டிருந்தபோது, சின்கா தனது இரு விழிகளையும் மூடிக்கொண்டு உறக்கத்தில் இருந்தார். இக்காட்சிகளை தொலைக்காட்சி ஊடகங்கள் படம்பிடித்து காட்டியுள்ளன. நாடு முழுவதும் உள்ள முக்கிய காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் ரஞ்சித் சின்கா தொடர்ந்து இரண்டாவது நாளாக இவ்வாறு நடந்து கொள்கிறார்.
முன்னதாக நேற்று இம்மாநாட்டில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசும்போதும் ரஞ்சித் சின்கா தூங்கியது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment