திருநின்றவூர், நவ 30–
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் காமராஜ் நகரை சேர்ந்தவர் ஜான்ஜெபராஜ் வேன் டிரைவர். இவரது மனைவி தமிழரசி. இவருக்கு கடந்த மாதம் அயனாவரம் இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று முன்தினம் கணவன்– மனைவி இருவரும் குழந்தையின் உடல் நிலை பரிசோதிப்பதற்காக மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அப்போது அங்கு நின்ற 45 வயது மதிக்கத்தக்க பெண் அவர்களிடம் பேச்சு கொடுத்தார். தனது மகள் பிரசவத்திற்கு வந்திருப்பதாக கூறினார்.
மேலும் திருமுல்லைவாயலில் வாடகைக்கு வீடு பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.திருமுல்லைவாயலில் ஆண் குழந்தையை கடத்திய பெண்: போலீசார் விசாரணை
இதனை நம்பிய ஜான் ஜெபராஜும், தமிழரசியும் குழந்தைக்கு சிகிச்சை முடிந்த பின்னர் அவரை திருமுல்லைவாயலுக்கு அழைத்து சென்றனர். வாடகை வீடுகளை பார்த்த அவர் மறுநாள் அட்வான்சு பணத்துடன் வருவதாக கூறிச் சென்றார்.
நேற்று காலை அந்த பெண் ஜான்ஜெபராஜ் வீட்டுக்கு வந்தார். அப்போது ஜான் ஜெபராஜ் வீட்டில் இல்லை. தமிழரசியும், குழந்தையும் மட்டும் இருந்தனர்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த மர்ம பெண் கடையில் டீ வாங்கித் தருமாறு கூறினார். குழந்தையை அவரிடம் கொடுத்து விட்டு தமிழரசி வெளியில் சென்றார்.
அவர் திரும்பி வந்த போது, குழந்தையுடன் பெண்ணை காணவில்லை. குழந்தையை கடத்தி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து திருமுல்லை வாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆவதால் பெயர் கூட இன்னும் வைக்க வில்லை. இதற்குள் மர்மப் பெண் குழந்தையை கடத்தி சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, குழந்தையின் கதி என்ன? என்பது தெரியாமல் பெற்றோர் மற்றும் உறவினர் தவிப்பில் உள்ளனர்.
கடந்த 28–ந்தேதி அயனாவரம் இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்டவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்?.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top