வேளச்சேரி, நவ. 30–
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு 12 மணிக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் அடையாறு கஸ்தூரிபா ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டான்.அடையாறு ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது
இதையடுத்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் கண்ணன், உதவி கமிஷனர் முருகன், இன்ஸ்பெக்டர் சகாதேவன் மற்றும் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் அடையாறு கஸ்தூரிபா ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கையில் 3 மொபைல் போன்கள் வைத்திருந்தார். அதில் ஒரு போன் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு பேசியது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் விக்கி என்கிற விக்னேஷ் என்பதும் வண்டலூர் சாலையோர குடியிருப்பில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. அந்த 3 செல்போன்களையும் விக்னேஷ் திருவான்மியூரில் கட்டிட வேலை செய்பவர்களிடம் இருந்து திருடியது தெரிய வந்தது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top