லால்குடி, டிச.3–
திருச்சியில் இருந்து சென்னை உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சாதாரண பயணிகள் ரெயில்கள் சென்று வரும் வழியில் லால்குடி ரெயில் நிலையம் அமைந்துள்ளது.லால்குடி ரெயில் நிலைய கட்டிடம் 5-ந்தேதிக்குள் வெடித்து சிதறும்: மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு
திருச்சி அருகே அமைந்துள்ள லால்குடி ரெயில் நிலையம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் வழக்கம் போல ரெயில் நிலைய அதிகாரி செல்வராஜ் அலுவலகத்துக்கு சென்று பணிகளை தொடங்கினார். அலுவலகத்திற்கு வரப்பெற்ற தபால்களை பார்வையிட்டார். அப்போது ஒரு தபால் அவரை அதிர்ச்சி அடைய செய்தது.
அந்த கடிதத்தை பிரித்து பார்த்த போது அதில் வருகிற 5.12.2014–ந்தேதிக்குள் உங்கள் ரெயில் நிலைய கட்டிடம் வெடித்து சிதறும் என குறிப்பிடப்பட்டு த.மு.மு.க. அரிய மங்கலம் பகுதி என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தால் அலுவலக வளாகம் பரபரப்பானது. இது பற்றி மேல் அதிகாரிகளுக்கு செல்வராஜ் தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் ரெயில் நிலைய பகுதிகளில் சோதனை நடத்த திருச்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் விரைந்து சென்றனர். லால்குடி ரெயில் நிலைய பகுதிகள் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு சோதனைகள் நடத்தினார்கள். இதனால் பயணிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பு நிலவியது.
மேலும் வருகிற 5–ந்தேதி வரை கூடுதலாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top