சேலத்தில் 1997-ம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட 90 கல்லூரிகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு பாடத் திட்டங் களை முறைப்படுத்தும் வகையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி வளர்ச்சிக் குழு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி வளர்ச்சிக் குழுவின் தலைவராக (டீன்) பேராசிரியர் கே.பழனிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரியார் பல்கலைக்கழகத் துடன் இணைவு பெற்ற கல்லூரி களுக்கான பாடத் திட்டங்களை உருவாக்குதல், வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் புதிய பாடங்களைக் கொண்டு வருதல், தர மேம்பாட்டை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை பேராசிரியர் கே.பழனிவேல் தலைமையிலான கல்வி வளர்ச்சிக் குழு மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று பெரியார் பல் கலைக்கழகத்தில் உள்ள கட்டிடங் களை முறையாக பராமரிக்க பல்கலைக்கழக பொறியாளர் பதவி உருவாக்கப்பட்டு, பல்கலைக்கழகப் பொறியாளராக, எஸ்.ஆர்.சாந்தாராம் நியமிக்கப் பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment