‘அரண்மனை’ படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கி வரும் படம்‘ஆம்பள’. இதில் விஷால் நாயகனாகவும், ஹன்சிகா மோத்மானி, மாதுரிமா மற்றும் மாதவி ரவி ஆகியோர் நாயகிகளாகவும் நடித்து வருகிறார்கள்.
ஆம்பள படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் சந்தானம்
இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், கிரண் ஆகியோரும் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக உருவாகிவரும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார்.

இதில் காமெடி வேடத்தில் சதீஷ் நடித்து வருகிறார். இவர் நடிப்பதால் சந்தானம் இப்படத்தில் நடிக்க வில்லை என்று செய்திகள் வெளியானது. ஆனால் சந்தானமும் இப்படத்தில் நடித்து வருகிறார். ஆம்பள படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட 75 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில் சந்தானம் கடைசியாக இப்படத்தில் இணைந்திருக்கிறார். இதில் சந்தானம் போலீஸ் வேடம் ஏற்று நடிக்கிறார்.

இப்படத்தை பொங்கலன்று வெளியிட முடிவு செய்துள்ளனர். சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பு படத்தில் இருந்து சந்தானம் தொடர்ந்து அவரது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top