பேரையூர், நவ. 23–
முல்லை பெரியார் அணை 35 ஆண்டுகளுக்கு பிறகு 142 அடி எட்டியதையொட்டி எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
முல்லை பெரியார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் 142 அடியை எட்டியது. இதனை கொண்டாடும் விதமாக திருமங்கலம் தேவர்சிலை முன்பு மாவட்ட கழக செயலாளர் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
0 comments :
Post a Comment