சென்னை, நவ.23-
11–வது யமஹா ஆசியான் கோப்பை மோட்டார் பைக் பந்தயம் டிசம்பர் 6 மற்றும் 7–ந்தேதிகளில் இந்தோனேசியாவில் நடக்கிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் ஜெகன்குமார், தீபக் ரவிக்குமார், பத்மநாபன், ரஜினி கிருஷ்ணன் ஆகிய 4 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். எஸ்.டி.ஆர் 15 மற்றும் எஸ்.டி.ஆர் 25 ஆகிய பிரிவுகளில் இந்த 4 பேரும் கலந்து கொள்கிறார்கள்.
ஆசியான் மோட்டார் பைக் பந்தயம்: இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்பு
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆர் 15 ஒன்மேக் ரேஸ் போட்டி மூலம் அவர்கள் தேர்வு பெற்றனர். தாய்லாந்து மலேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் வீரர்கள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 72 பேர் கலந்து கொள்கிறார்கள்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top