திருமலை, நவ.23–
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 55 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இவர்களில் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு வழியாக நடைபாதையாக வந்து 11 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
திருமலையில் ஒரே நாளில் 55 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
இலவச தரிசனத்துக்கு 9 மணி நேரமும், நடைபாதை வழியாக வரும் திவ்யதரிசனத்துக்கு 4 மணி நேரமும், ஆன்லைனில் ரூ.300 கட்டணம் செலுத்தும் பிரத்யேக தரிசனத்துக்கு 2 மணி நேரமும் ஆனது. நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.2 கோடியே 73 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
அன்னபிரசாத மண்டபத்தில் 51 ஆயிரம் பக்தர்கள் இலவச உணவு சாப்பிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top