திருமலை, நவ.23–
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 55 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இவர்களில் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு வழியாக நடைபாதையாக வந்து 11 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
இலவச தரிசனத்துக்கு 9 மணி நேரமும், நடைபாதை வழியாக வரும் திவ்யதரிசனத்துக்கு 4 மணி நேரமும், ஆன்லைனில் ரூ.300 கட்டணம் செலுத்தும் பிரத்யேக தரிசனத்துக்கு 2 மணி நேரமும் ஆனது. நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.2 கோடியே 73 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
அன்னபிரசாத மண்டபத்தில் 51 ஆயிரம் பக்தர்கள் இலவச உணவு சாப்பிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
0 comments :
Post a Comment