மதுரை, டிச. 11–
முன்னாள் தி.மு.க. அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 29.3.2012 அன்று, திருச்சியில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராமஜெயத்தின் மனைவி லதா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–ராமஜெயம் கொலையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் மனைவி மனு
ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 2½ ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை கொலையாளிகள் பிடிபட வில்லை. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.
இந்த கொலை வழக்கை, சி.பி.ஐ. விசாரித்தால் உண்மை தெரியும். எனவே சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அடுத்த மாதம் (ஜனவரி) 9–ந் தேதி விசாரணையை தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top