‘இரண்டாம் பனிப்போர்’ பற்றி பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய கட்டுரை அமெரிக்காவின் நோக்கங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்லியது.
உலகம் முழுவதும் தான் விரும்பும் அரசாங்கமே அமைய வேண்டும் என்பதற்காக ஜனநாயகக் காவலன் என்ற போர்வையில் மூக்கை நுழைக்கிறது அமெரிக்கா. ஆயுத வியாபாரிகளை நன்கு கொழுக்க வைக்கிறது. இதுவரை அமெரிக்கா தலையிட்ட எந்த நாட்டிலாவது அமைதி ஏற்பட்டிருக்கிறதா? நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது என்பதே உண்மை.