நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தின் கதை தன்னுடையது என்று மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். தனக்கு நஷ்ட ஈடு கொடுத்துவிட்டு தான் படத்தை வெளியிடவேண்டும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். 
லிங்கா படம் நாளை வெளியாகுமா? ஐகோர்ட்டு உத்தரவால் பரபரப்பு
இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தனபாலன், வேலுமணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள், லிங்கா படத்தின் கதை, தனது கதை என்று மனுதாரர் சொல்கிறார். இது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை தான் அவர் அணுகவேண்டும். 4 வாரத்திற்குள் அவர் அந்த நீதிமன்றத்தை அணுகலாம். இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரிதான். பல கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட லிங்கா படம் வெளியாவதை தடுக்க முடியாது. இருப்பினும் மனுதாரருக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அதற்கு ஏற்றாற்போல் தற்போது லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ரூ.5 கோடியை மதுரை ஐகோர்ட்டில் செலுத்த வேண்டும். 

மேலும் ரூ. 5 கோடிக்கு வங்கி பிணை பத்திரமும் காண்பிக்க வேண்டும். நாளைக்குள் அவர் பணத்தை கட்டவேண்டும் என்று உத்தரவிட்டனர். மதுரை ஐகோர்ட்டு கிளையின் இந்த உத்தரவால் லிங்கா படம் நாளை 12 மணிக்குமேல் தான் வெளியாகும் என தெரிகிறது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top