ஹாங்காங், நவ.23-
ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், உலக சாம்பியனான சீனாவின் ஷென் லாங்கை சந்தித்தார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 17-21, 21-19, 6-21 என்ற செட் கணக்கில் ஷென் லாங்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
கடைசி செட் தவிர மற்ற இரண்டு செட்களிலும் ஸ்ரீகாந்த், ஷென் லாங்குக்கு கடும் நெருக்கடி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், உலக சாம்பியனான சீனாவின் ஷென் லாங்கை சந்தித்தார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 17-21, 21-19, 6-21 என்ற செட் கணக்கில் ஷென் லாங்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
கடைசி செட் தவிர மற்ற இரண்டு செட்களிலும் ஸ்ரீகாந்த், ஷென் லாங்குக்கு கடும் நெருக்கடி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
0 comments :
Post a Comment