புதுடெல்லி, நவ. 25–
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த்.
கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் இவர் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதானார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த அவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது.
இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது.
இந்தநிலையில் ஸ்ரீசாந்த் இந்தி படத்தில் அறிமுகமாகிறார். புஜாபட் தயாரிக்கும் படத்தில் அவர் நடிக்க உள்ளார். ஸ்ரீசாந்த் நடிக்கும் அந்த படத்துக்கு ‘காப்ரேட்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மலையாள அறிவுரையாளர் பாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
ஸ்ரீசாந்துக்கு ஏற்கனவே நடிப்பாற்றல் இருப்பதால் இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக பூஜாபட் தெரிவித்தார்.
31 வயதான அவர் ஏற்கனவே டெலிவிசன் ரியலிட்டி ஷோவில் பிரமாதமாக நடனம் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment