புதுடெல்லி, டிச.9-

இன்று மதியம் 2 மணிக்குள் குருநாத் மெய்யப்பன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதற்காக நான்கு வாய்ப்புகளை உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது.
குருநாத் மெய்யப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐ.பி.எல். வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி
வாய்ப்பு 1: இந்திய கிரிக்கெட் வாரிய குழு சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் குறித்து முடிவு எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளில் சீனிவாசன் தலையிடக்கூடாது.

வாய்ப்பு 2: இரு நீதிபதிகள் மெய்யப்பனுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனையை முடிவு செய்வார்கள்.

வாய்ப்பு 3: ஐ.பி.எல். நிர்வாக குழு மெய்யப்பனுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனையை முடிவு செய்யலாம்.

வாய்ப்பு 4: மேட்ச் பிக்சிங் மற்றும் பிக்சிங் தொடர்பான விசாரணைய நடத்திய நீதிபதி முத்கல் குழு மெய்யப்பனுக்கான தண்டனையை முடிவு செய்யலாம் என்று நான்கு வாய்ப்புகளை உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top