சென்னை, நவ.27–
புதிய கட்சியை தொடங்கிய ஜி.கே.வாசன் நாளை திருச்சியில் கட்சியின் பெயரை அறிவிக்கிறார். சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட ஜி.கே.வாசன் கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் ராட்சத பலூனை பறக்கவிட்டார்.
ஆர்.வி.டவரில் அந்த ராட்சத பலூனை ஜி.கே.வாசன் பறக்க விட்டார். அந்த பலூனில் காமராஜர், மூப்பனார் ஆகியோரின் படங்கள் இடம் பெற்று இருந்தன.
மேலும் திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுவிக்கும் வகையில் இந்த பலூன் பறக்க விடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கத்திப்பாரா ஜனார்த்தனன், என்.சீத்தாபதி, ஆலந்தூர் பாஸ்கர், சைதை ரவி, கசாலி, தாஸ்பாண்டியன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், ராஜமாணிக்கம், கே.கே.நகர் எம்.சுரேஷ், ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment