சென்னை, நவ.27–
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் ஜான்தங்கம். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இதைத்தொடர்ந்து அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அந்த பதவியும் தற்போது பறிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கன்னியாகுமரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜான்தங்கம் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காண்டிராக்டர் ஒருவர் ஜான்தங்கம் மீது ரூ.1 கோடி மோசடி புகார் கூறியிருந்தார். இதன் எதிரொலியாக அவரது பதவி பறிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment