மக்காவ், நவ. 27-

மக்காவ் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, பிரனோய் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

சீனாவில் நடைபெற்று வரும் மக்காவ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி.சிந்து, இந்தோனேசியாவின் லிண்டாவேணியை எதிர்கொண்டார். துவக்கத்தில் சற்று தடுமாறிய பி.வி.சிந்து, கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, 21-16, 16-21, 21-19 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதியை உறுதி செய்தார். காலிறுதியில் சீனாவின் லி ஹான் என்பவரை சிந்து சந்திக்க உள்ளார்.
மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து-பிரனோய் காலிறுதிக்கு முன்னேற்றம்
ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், 17-21, 21-19, 21-14 என்ற செட்கணக்கில் சீன தைபே வீரர் லின் யு-செயினை வென்றார். 

3ம் தரநிலையில் உள்ள பிரனோய், காலிறுதியில் சோனி திவி குன்கோரோவுடன் மோதுகிறார். இந்தோனேசியாவின் சோனி திவி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் சாய் பிரனீத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top