லக்னோ, டிச.6-

நேபாள எல்லை வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பெண்கள் உள்பட சீனாவை சேர்ந்த 3 பேரை
எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற சீனர்கள் கைது
நேபாள நாட்டின் வழியாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கக்ரவா எல்லைக்கோட்டை நேற்று கடக்க முயன்ற இவர்களை எல்லை பாதுகாப்பு படையின் ஒரு பிரிவான 'சாஸ்த்ரா சீமா பால்' படையினர் வளைத்து பிடித்தனர். 

இந்தியாவுக்குள் நுழைவதற்கான பாஸ்போர்ட், விசா போன்றவை அவர்களிடம் இல்லாததால் அவர்களை கைது செய்து மோகனா பகுதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், உரிய விசாரணைக்கு பின்னர் இன்று சிறையில் அடைத்தனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top