திரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இருவரும் நெருக்கமாக இருப்பது போல் படங்களும் வெளி வந்தது. வருண்மணியன் ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்களை தயாரித்து உள்ளார்.
இது குறித்து திரிஷா விடம் கேட்ட, போது தனக்கு நிச்சயதார்த்தம் நடக்க வில்லை என்று மறுத்தார். திரிஷாவையும், தெலுங்கு நடிகர் ராணாவையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. பொது விழாக்களில் இருவரும் ஜோடிகளாக சுற்றினார்கள். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அதன் பிறகுதான் வருண்மணியனுக்கும், திரிஷாவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. தனக்கு எதிராக தவறான வதந்திகள் பரப்பபடுவதாக திரிஷா வருத்தமடைந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:–
கதாநாயகிகளை மக்கள் ஸ்பெஷலாக பார்க்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. நாங்களும் மற்றவர்கள் போலத்தான். எங்களுக்கும் மனசு, காதல், திருமண ஆசைகள் எல்லாம் இருக்கிறது. மற்றவர்கள் போலவே நாங்களும் வாழ ஆசைப்படுகிறோம். விருப்பு, வெறுப்புகள் எங்களுக்கும் இருக்கிறது. இதை புரிந்து கொண்டு எங்களையும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.
இது குறித்து திரிஷா விடம் கேட்ட, போது தனக்கு நிச்சயதார்த்தம் நடக்க வில்லை என்று மறுத்தார். திரிஷாவையும், தெலுங்கு நடிகர் ராணாவையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. பொது விழாக்களில் இருவரும் ஜோடிகளாக சுற்றினார்கள். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அதன் பிறகுதான் வருண்மணியனுக்கும், திரிஷாவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. தனக்கு எதிராக தவறான வதந்திகள் பரப்பபடுவதாக திரிஷா வருத்தமடைந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:–
கதாநாயகிகளை மக்கள் ஸ்பெஷலாக பார்க்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. நாங்களும் மற்றவர்கள் போலத்தான். எங்களுக்கும் மனசு, காதல், திருமண ஆசைகள் எல்லாம் இருக்கிறது. மற்றவர்கள் போலவே நாங்களும் வாழ ஆசைப்படுகிறோம். விருப்பு, வெறுப்புகள் எங்களுக்கும் இருக்கிறது. இதை புரிந்து கொண்டு எங்களையும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment