கொல்கத்தா, டிச.6-

மேற்கு வங்காள மாநில மக்கள் நேற்று அறுவடைத் திருநாளான ‘நபன்னா’ விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேற்கு வங்காளத்தில் பிரசாதம் சாப்பிட்ட 2 பெண்கள் பலி-25 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
இங்குள்ள பர்த்வான் மாவட்டத்தின் பர்பாஸ்தாலி பகுதியில் உள்ள வித்யாநகர் கிராமத்திலும் இந்த திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது, இங்குள்ள ஒரு வீட்டில் பூஜைக்கு பின்னர் வழங்கிய பிரசாதத்தை சாப்பிட்ட பலர் மயங்கி விழுந்தனர்.

அவர்களை தூக்கிச் சென்ற கிராம மக்கள் ஸ்ரீராம்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி லலிதா தேப்நாத் என்ற பெண் நேற்று பலியானார். பூஜை நடத்திய வீட்டின் உரிமையாளரின் தாயாரான லட்சுமி பாக் என்பவர் இன்று உயிரிழந்தார். மேலும், 25 பேர் இதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top