மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெகதி ஸ்ரீகுமார்.
இவர் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் 10–ந்தேதி கோழிக்கோடு அருகே நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள காரில் சென்றார். அப்போது இவரது கார் விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த ஜெகதி ஸ்ரீகுமார் படுகாயம் அடைந்தார். கோமா நிலைக்கு தள்ளப்பட்ட அவருக்கு வேலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடல் நலம் தேறி அவர் கேரளா திரும்பினார். தற்போது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
ஜெகதி ஸ்ரீகுமாருக்கு ஏற்பட்ட விபத்திற்கு நஷ்டஈடு கேட்டு, அவரது மனைவி ஷோபா மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு அளிக்கும் கோர்ட்டில் மனு செய்தார். ஜெகதி ஸ்ரீகுமாருக்கு ஏற்பட்ட விபத்திற்கு ரூ.10.90 கோடி நஷ்டஈடு அளிக்க வேண்டுமென்று முதலில் மனு கொடுத்த அவரது மனைவி பின்னர் அதனை ரூ.13 கோடி வேண்டுமென்று கேட்டிருந்தார்.
இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நடந்த லோக் அதாலத் கோர்ட்டில் இது தொடர்பான மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெகதி ஸ்ரீகுமார் தரப்பில் அவரது வக்கீல்களும், இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் இடையே நடந்த விவாதத்திற்கு பிறகு ஜெகதி ஸ்ரீகுமாருக்கு இன்று ரூ.5.90 கோடி நஷ்டஈடாக வழங்கப்பட்டது.
இவர் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் 10–ந்தேதி கோழிக்கோடு அருகே நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள காரில் சென்றார். அப்போது இவரது கார் விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த ஜெகதி ஸ்ரீகுமார் படுகாயம் அடைந்தார். கோமா நிலைக்கு தள்ளப்பட்ட அவருக்கு வேலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடல் நலம் தேறி அவர் கேரளா திரும்பினார். தற்போது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
ஜெகதி ஸ்ரீகுமாருக்கு ஏற்பட்ட விபத்திற்கு நஷ்டஈடு கேட்டு, அவரது மனைவி ஷோபா மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு அளிக்கும் கோர்ட்டில் மனு செய்தார். ஜெகதி ஸ்ரீகுமாருக்கு ஏற்பட்ட விபத்திற்கு ரூ.10.90 கோடி நஷ்டஈடு அளிக்க வேண்டுமென்று முதலில் மனு கொடுத்த அவரது மனைவி பின்னர் அதனை ரூ.13 கோடி வேண்டுமென்று கேட்டிருந்தார்.
இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நடந்த லோக் அதாலத் கோர்ட்டில் இது தொடர்பான மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெகதி ஸ்ரீகுமார் தரப்பில் அவரது வக்கீல்களும், இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் இடையே நடந்த விவாதத்திற்கு பிறகு ஜெகதி ஸ்ரீகுமாருக்கு இன்று ரூ.5.90 கோடி நஷ்டஈடாக வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment