டேராடூன், டிச.6-

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டம், ரூர்கேலா நகரில் 
உள்ள ஒரு பள்ளியில் பயின்றுவரும் மாணவர்கள் இன்று பிற்பகல் வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
உத்தரகாண்ட் பள்ளி அருகே குண்டு வெடிப்பு: வீடு திரும்பிய மாணவன் உடல் சிதறி பலி
அப்போது, அவ்வழியே உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் கிடந்த மர்மப்பொருள் ஒன்றை கண்டெடுத்த 12 வயது சிறுவன் அதை உருட்டி, உதைத்து விளையாடியபடி சென்றான். சற்றும் எதிர்பாராத வகையில் அந்த மர்மப் பொருள் வெடித்ததில் அந்தச் சிறுவன் உடல் சிதறி, சம்பவ இடத்திலேயே பலியானான்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் படையினரும், வெடி குண்டு நிபுணர்களும் விரைந்து சென்றுள்ளனர். வெடித்தது குண்டு தானா? அல்லது பட்டாசு வகையைச் சேர்ந்த வெடிப்பொருளா? என்பது தொடர்பாக அவர்கள் ஆய்வு செய்து வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top