திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடிகர் அர்ஜுன் நேற்று குடும்பத்தினருடன் வந்து சாமி கும்பிட்டார். வியாழக்கிழமை இரவு திருப்பதி வந்த அவர் அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு மனைவி, மகளுடன் பாதயாத்திரையாக வந்தார்.
நேற்று காலை அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தனது ‘ஜெய்ஹிந்த்–2’ படம் வெற்றி அடைந்ததை முன்னிட்டு அவர் ஏழுமலையானை தரிசனம் செய்ததாக அவர் கூறினார். ஏற்கனவே ஜெய்ஹிந்த்–2 படம் ரிலீஸ் ஆவதற்கு முன் அர்ஜுன் திருமலை வந்து பிரார்த்தனை செய்தார்.
ஆஞ்சநேயர் சன்னதியில் தியானம் செய்தார். இப்போது படம் வெற்றி அடைந்ததால் வேண்டுதலின் பேரில் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.
நேற்று காலை அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தனது ‘ஜெய்ஹிந்த்–2’ படம் வெற்றி அடைந்ததை முன்னிட்டு அவர் ஏழுமலையானை தரிசனம் செய்ததாக அவர் கூறினார். ஏற்கனவே ஜெய்ஹிந்த்–2 படம் ரிலீஸ் ஆவதற்கு முன் அர்ஜுன் திருமலை வந்து பிரார்த்தனை செய்தார்.
ஆஞ்சநேயர் சன்னதியில் தியானம் செய்தார். இப்போது படம் வெற்றி அடைந்ததால் வேண்டுதலின் பேரில் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.
0 comments :
Post a Comment