ஸ்ரீநகர், டிச. 5-

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்திற்கு உட்பட்ட டிரால் பஸ் நிலையத்தில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்கியதில் ஒருவர் பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர்.
ஸ்ரீநகரில் போலீஸ் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்: ஒருவர் பலி- 6 பேர் காயம்
ஸ்ரீநகரில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் உள்ள டிரால் பஸ் நிலையம் அருகே இன்று ஏராளமான பயணிகள் நின்றுகொண்டிருந்தனர். போலீசாரின் ரோந்து வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனம் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

இதில், பஸ் நிலையத்தில் நின்றிருநத் குலாம் ஹசன் மிர் (60) என்ற முதியவர் பலியானர். மேலும், 6 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலையடுத்து சம்பவம் நடைபெற்ற பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top