தேஜ்பூர், டிச. 5-
அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் காயம் அல்லது சேதம் குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை.
அசாம் மாநிலத்தில் உள்ள சோனித்பூர் மாவட்டத்திலும், அருணாச்சல பிரதேசத்தின் வடக்கு காமேங் மாவட்டத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானதாகவும் ஷில்லாங் மண்டல நிலஅதிர்வு பதிவு துறை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 5.24 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் சேதம் ஏற்பட்டதா? என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் காயம் அல்லது சேதம் குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை.
அசாம் மாநிலத்தில் உள்ள சோனித்பூர் மாவட்டத்திலும், அருணாச்சல பிரதேசத்தின் வடக்கு காமேங் மாவட்டத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானதாகவும் ஷில்லாங் மண்டல நிலஅதிர்வு பதிவு துறை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 5.24 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் சேதம் ஏற்பட்டதா? என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
0 comments :
Post a Comment