பாட்னா, டிச.3-

பீகார் மாநிலம், மேற்கு சம்ப்ரான் மாவட்டத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் 16 வயது சிறுமி கற்பழித்து, கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார்: கரும்பு தோட்டத்தில் கற்பழித்து சிறுமி படுகொலை
இங்குள்ள பாகாஹா பகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த இந்த சிறுமி நேற்று வழக்கம் போல் ஆடு மேய்க்க சென்றாள். மாலை வெகுநேரமாகியும் அவள் வீடு திரும்பாத நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் பிணமாக கிடந்தாள்.

யாரோ சிலர் அவளை கற்பழித்து பின்னர் கொன்றிருக்கலாம் என கருதும் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு நபரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், அவரை விடுவிக்க வேண்டும் என அப்பகுதி போலீஸ் நிலையத்தின் எதிரே கைது செய்யப்பட்ட வாலிபரின் கிராமத்தை சேர்ந்த மக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்நிலையில், அந்த வாலிபர் மீது புகார் அளித்திருந்த சிறுமியின் தாயார், தனது புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தற்போது கூறுவதாக போலீசார் தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top