கோவை, டிச. 11–
பொள்ளாச்சியில் தனியாருக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையைச் சேர்ந்த வீராசாமி என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மாணவிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு கோவையில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக 23 பேர் சாட்சியம் அளித்தனர். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் வருகிற 24–ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment