ஸ்ரீநகர், டிச. 11-

ஸ்ரீநகரில் 21 வயதான சட்டக் கல்லூரி மாணவி மீது காரில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர்கள் ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள்.
ஸ்ரீநகரில் சட்டக் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு
ஸ்ரீநகரில் நவ்ஷேரா என்ற இடத்தில் தனியார் சட்டக் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் 21 வயதான மாணவி படித்து வருகிறார். இன்று அவர் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்தபோது காரில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர்கள் அவர் மீது ஆசிட் வீசினார்கள்.

உடனே, அவர் எஸ்.கே.ஐ.எம்.எஸ். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆசிட் பட்டதால் அவரது உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், ஆசிட் தாக்குதல் நடத்திய இளைஞர்களை யார் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஸ்ரீநகரில் நடைபெறும் இரண்டாவது சம்பவம் இதுவாகும். இதற்கு முன் கடந்த வருடம் ஜனவரி மாதம் 30 வயதான தனியார் பள்ளி ஆசிரியை மீது ஆசிட் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top