பெய்ரூட், டிச. 11–
அமைதி மற்றும் மனித நேய பிரபஞ்ச அழகிப் போட்டி–2014 லெபனான் நாட்டில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 145 இளம்பெண்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஜெய்பூரைச் சேர்ந்த 22 வயது அழகி ருகிசிங் கலந்து கொண்டார்.
சர்வதேச மனித உரிமை அமைப்பு, உலக சமாதான தொண்டு அமைப்பு சார்பில் இந்த போட்டி நடந்தது. இதில் இந்திய அழகி ருகிசிங் அமைதி மற்றும் மனிதநேய பிரபஞ்ச அழகி–2014 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து அழகி ருகிசிங்குக்கு அதற்கான கிரீடம் சூட்டப்பட்டது. 50 ஆயிரம் டாலர் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இதையடுத்து உலக சுற்றுலா மற்றும் அமைதிக்கான தூதுவராக அவர் செயல்பட உள்ளார்.
அமைதி மற்றும் மனிதநேய பிரபஞ்ச அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டது குறித்து இந்திய அழகி ருகிசிங் கூறியதாவது:–
இந்த மகிழ்ச்சியை என் மீது அன்பு வைத்துள்ள ஒவ்வொருவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதற்காக இந்தியா செல்லும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments :
Post a Comment