கராச்சி, டிச. 11-

சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 58 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. அத்துடன் அவர்களின் 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
இந்திய மீனவர்கள் 58 பேர் பாகிஸ்தானில் கைது
அரபிக் கடலில் வரையறுக்கபட்ட கடல் எல்லையை தாண்டி இருநாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதும், அது தொடர்பாக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலிர் மாவட்ட ஜெயிலில் இருந்த 36 இந்திய மீனவர்கள் தண்டனைக் காலம் முடிந்து  கடந்த மாதம் 29-ந்தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

பல ஆண்டுகளாக 423 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளிலும், சுமார் 400 பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய சிறைகளிலும் உள்ளதாக மீனவர் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top