ராஞ்சி, டிச.9-
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் சாய்பாஸா சிறைச்சாலை உள்ளது. இங்குள்ள 53 கைதிகளை உள்ளூர் கோர்ட்டில் இன்று ஆஜர்ப்படுத்திய சிறைக் காவலர்கள், மீண்டும் சிறைக்கு அழைத்து வந்தனர்.
சிறை வாசலில் இவர்களை கணக்கெடுத்து உள்ளே அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில கைதிகள் தப்பியோட ஆரம்பித்தனர். அவர்களை சிறைக் காவலர்கள் விரட்டிச் சென்றனர். தப்பியோடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.
இதில் விசாரணைக் கைதிகள் இருவர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். காவலர்களிடம் பிடிபடாமல் தப்பியோடிவிட்ட 13 பேரை பிடிப்பதற்காக அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் பலத்த போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்களும் வெளியாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் சாய்பாஸா சிறைச்சாலை உள்ளது. இங்குள்ள 53 கைதிகளை உள்ளூர் கோர்ட்டில் இன்று ஆஜர்ப்படுத்திய சிறைக் காவலர்கள், மீண்டும் சிறைக்கு அழைத்து வந்தனர்.
சிறை வாசலில் இவர்களை கணக்கெடுத்து உள்ளே அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில கைதிகள் தப்பியோட ஆரம்பித்தனர். அவர்களை சிறைக் காவலர்கள் விரட்டிச் சென்றனர். தப்பியோடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.
இதில் விசாரணைக் கைதிகள் இருவர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். காவலர்களிடம் பிடிபடாமல் தப்பியோடிவிட்ட 13 பேரை பிடிப்பதற்காக அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் பலத்த போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்களும் வெளியாகியுள்ளன.
0 comments :
Post a Comment