பாட்டியாலா, டிச. 9-

இந்தியாவில் தற்போது ரஞ்சி டிராபி கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இதில் பாட்டியாலா மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் பஞ்சாப்- அரியானா அணிகள் விளையாடி வருகின்றன.
ரஞ்சி டிராபியில் யுவராஜ் சிங் அபார சதம்
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 273 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக யுவராஜ் சிங் 59 ரன்கள் எடுத்தார். அரியானா, முதல் இன்னிங்சில் 283 ரன்கள் எடுத்தது. 10 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய பஞ்சாப் அணி, 3-வது நாளான இன்று 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த யுவராஜ், 2-வது இன்னிங்சில் 130 ரன்கள் குவித்தார். இதனால் பஞ்சாப் அணி 320 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பின்னர் 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அரியானா பேட்டிங் செய்து வருகிறது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top