சென்னை, டிச. 9–
புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அமெரிக்காவின் ‘‘டைம்’’ பத்திரிகை இந்த ஆண்டின் சிறந்த மனிதர் விருதுக்கு நடத்திய கருத்து கணிப்பில் 225 நாடுகளை சேர்ந்த சுமார் 50 லட்சம் வாசகர்கள் பங்கேற்றனர். இதில் 16 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று, பிரதமர் நரேந்திரமோடி முதலிடத்தைப்பிடித்துள்ளார்.
இந்த விருது, கிடைக்க வேண்டிய தருணத்தில் கிடைத்திருப்பது, நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பமளிக்க கூடியதாகும். பிரதமர் நரேந்திரமோடி இது போன்று மேன்மேலும் பல உயரிய விருதுகளை பெற்று பல்லாண்டுகள் வாழ்ந்து நம் இந்திய நாட்டினை, முதன்மையான வல்லரசு நாடு என்னும் உச்சத்தினை அடைய செய்ய வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment