பீஜிங், டிச. 9-

பீஜிங்கின் ஹியூபே நகரத்தில் உள்ள பள்ளியில் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து பெண்கள் பலியாகினர், 2 பேர் காயமடைந்தனர்.
சீனாவில் கூடைப்பந்து விளையாடிய ஐந்து பெண்கள் பலி
ஹியூபே நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று மாலை மாணவிகள் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதையடுத்து, இரு அணியைச் சேர்ந்தவர்களும் அந்த மாணவியைச் சுற்றி நிற்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக அருகிலிருந்த சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் அன்ஹுய் மாகாண வேலை பாதுகாப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவரின் உடல் நலம் தேறியுள்ளதாகவும், இன்னொருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் ஹியூபே நகர நிர்வாகம் இணையதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பள்ளி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top