மயிலாடுதுறை, டிச.8–
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு வெள்ளம் தாங்கி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி. இவரது மகள் நித்யா (15). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.மயிலாடுதுறையில் லாரி மோதி 10–ம் வகுப்பு மாணவி பலி
இன்று காலை 8.30 மணிக்கு மாணவி நித்யா சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். பள்ளியின் அருகில் சென்ற போது சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலே மாணவி நித்யா உடல் நசுங்கி பலியானார். இதனை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top