தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சுவேதாபாசு. இவர் சமீபத்தில் விபசாரத்தில் ஈடுபட்டதாக கைதானார். நட்சத்திர ஓட்டலில் போலீசார் சோதனை நடத்தி கையும் களவுமாக இவரை பிடித்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி வழக்கை விசாரித்து சுவதோபாசுவை பெண்கள் காப்பகத்துக்கு அனுப்ப உத்தரவிட்டார். என்னை திட்டமிட்டு களங்கப்படுத்தி விட்டனர்: சுவேதாபாசு வருத்தம்

பல வாரங்கள் அந்த காப்பகத்திலேயே தங்கி இருந்தார். அப்போது பண கஷ்டத்தில் தவித்ததாகவும் அதை பயன்படுத்தி சிலர் விபசாரத்தில் தள்ளி விட்டதாகவும் கூறினார். சுவேதா பாசுவை தங்களுடன் அனுப்பி வைக்கும்படி அவரது பெற்றோர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். தற்போது காப்பக்கத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார். 

பல இயக்குனர்கள் சுவேதாபாசுவின் பரிதாப நிலையை அறிந்து தங்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக அறிவித்து உள்ளனர். ஆனாலும் எந்த படத்தையும் இதுவரை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் ஒரு படத்துக்கு அவர் திரைக்கதை எழுதுவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் விபசார வழக்கில் சிக்கியது குறித்து சுவேதா பாசு மும்பையில் அளித்த பேட்டியொன்றில் கூறும்போது, சிலர் திட்டமிட்டு என்னை சிக்க வைத்து விட்டனர். எனது பெயரையும் களங்கப்படுத்தி விட்டார்கள். ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தேன். அப்போது இவையெல்லாம் நடந்து விட்டது. ஆனாலும் இறுதியில் உண்மையானதில் எனக்கு மகிழ்ச்சி என்றார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top