சென்னை, டிச.3-
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்தார். இதில் அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காலில் மாவுக்கட்டு போடப்பட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகன் வீட்டில் ஜி.கே.மணி ஓய்வு எடுத்து வந்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் சக்கர நாற்காலியில் இருந்தபடியே ஜி.கே.மணி கலந்துகொண்டார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வீட்டில் வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டு ஜி.கே.மணி மயங்கி விழுந்தார்.
உடனடியாக, அவர் ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுயநினைவு இல்லாமல் இருந்த அவரை, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஜி.கே.மணி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேரில் சென்று அவரை பார்த்தனர். தற்போது, ஜி.கே.மணியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்தார். இதில் அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காலில் மாவுக்கட்டு போடப்பட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகன் வீட்டில் ஜி.கே.மணி ஓய்வு எடுத்து வந்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் சக்கர நாற்காலியில் இருந்தபடியே ஜி.கே.மணி கலந்துகொண்டார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வீட்டில் வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டு ஜி.கே.மணி மயங்கி விழுந்தார்.
உடனடியாக, அவர் ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுயநினைவு இல்லாமல் இருந்த அவரை, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஜி.கே.மணி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேரில் சென்று அவரை பார்த்தனர். தற்போது, ஜி.கே.மணியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment