‘‘மாற்றுத்திறனாளிகள் தின’’ விழாவையொட்டி முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–

மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்புகள் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற்றிட, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையை தமிழக அரசு 1000 ரூபாயாக உயர்த்தியது.
மாற்றுத் திறனாளிகள் தினம்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
ஆரம்ப நிலை பயிற்சி மையத்திற்கு வரும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சத்துணவு; சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, வாசிப்பாளர் உதவித்தொகை ஆகியவை இருமடங்காக உயர்வு என பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக வேலை உறுதியளிப்புத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 4 மணிநேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் வழங்கப்படுவது.

சென்னையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினை கண்டறிந்து தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகை, சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்; பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத வீடுகள் ஒதுக்கீடு; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தேர்வு; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு; மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயணச்சலுகை; குடும்பத்தில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அக்குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் போன்ற எண்ணற்ற சீர்மிகு திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா துவக்கினார். அவற்றை தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்திடவும், அவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக வாழ்ந்திடவும், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகளை மீண்டும் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top