அடிலெய்டு, டிச.2-

இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்கு பெரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை நேற்றிரவு திருத்தி வெளியிடப்பட்டது. நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டி முடிந்ததும், இந்திய வீரர்கள் ஒருநாள் போட்டிக்குத் தயாராவதற்கான கால இடைவெளி குறைவாக இருக்கும் காரணத்தால் முதல் இரண்டு போட்டிகளுக்கான தேதிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மாற்றியுள்ளது.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் இரண்டு போட்டிகளில் மாற்றம்
அதன்படி முத்தரப்பு தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் ஜனவரி 16 அன்று மோதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி 12-ந்தேதி சிட்னியில் நடக்கும் முதல் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுவதாக இருந்தது. அதே போல் ஜனவரி 18-ந் தேதி மெல்போர்னில் நடக்கும் 2வது போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. முன்னதாக 2வது போட்டியில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதுவதாக இருந்தது.

இந்த இரண்டு போட்டிகளுக்கான மாற்றம் தவிர மற்ற போட்டிகள் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட மைதானத்தில் நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. எனினும், ஓவல் மைதானத்தில் நடக்கவிருந்த இங்கிலாந்துக்கு எதிராக, பாரம்பரியமிக்க ஆஸ்திரேலிய ப்ரைம் மினிஸ்டர் லெவன் அணி மோதும் போட்டி எவ்வித மாற்றமுமின்றி ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top