சென்னை, டிச.2–
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2015) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறுகிறது.உலக கோப்பை கிரிக்கெட்: எம்.ஆர்.எப். ஸ்பான்சர்
இந்த போட்டியின் முக்கிய ஸ்பான்சர்களில் ஒன்றாக சென்னையை சேர்ந்த எம்.ஆர்.எப். நிறுவனம் இணைந்து உள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இது அறிவிக்கப்பட்டது. இதில் ஐ.சி.சி. தலைவர் என்.சீனிவாசன், எம்.ஆர்.எப். நிறுவன நிர்வாக இயக்குனர் கே.எம்.மேமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஸ்பான்சர் மூலம் போட்டி நடைபெறும் அனைத்து இடங்களிலும் பல்நோக்கு பிராண்டிங் வாய்ப்புகளை பெறுவதுடன் உலக அளவில் நடைபெறும் விளம்பர நிகழ்ச்சிகளிலும் எம்.ஆர்.எப். நிறுவனம் பங்கேற்கும்.
இதுகுறித்து மேமன் கூறும்போது, ‘‘எம்.ஆர்.எப். நிறுவனத்துக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். உலக கோப்பையில் கூட்டு வகிப்பது பெருமை அளிக்கிறது’’ என்றார்.
என்.சீனிவாசன் கூறும் போது, ‘‘உலக கோப்பை போட்டி ஸ்பான்சராக பங்கேற்பதன் மூலம் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் பிராண்ட் உலகம் முழுவதும் பிரபலம் அடையும். 25 ஆண்டுக்கு மேலாக இந்த நிறுவனம் கிரிக்கெட்டுடன் தொடர்பில் இருந்து வருகிறது’’ என்றார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top