ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சென்னை நகரில் நிகழக்கூடிய மாபெரும் இசைத் திருவிழா ‘சென்னையில் திருவையாறு’. இந்த இசைத் திருவிழா சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த விழாவை கடந்த 9 ஆண்டுகளாக லட்சுமண் ஸ்ருதி இசைக் குழு வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
சென்னையில் திருவையாறு டிசம்பர் 18-ந் தேதி தொடக்கம்
இந்த ஆண்டும் டிசம்பர் 18-ந் தேதி முதல் டிசம்பர் 25-ந் தேதி வரை சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை லட்சுமண் ஸ்ருதி இசைக்குழு நடத்தவுள்ளது. டிசம்பர் 18-ந் தேதி மாலை 3 மணிக்கு காமராஜர் அரங்கில் நாதஸ்வர கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் நாதஸ்வர இசையுடன் தொடங்கும் இந்த விழாவை, அன்றைய தினம் மாலை 6 மணிக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். 

இந்த விழாவில் முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top