ராஜபாளையம், டிச.9-
64-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சுங்க இலாகா அணி 20-25, 31-29, 25-22, 25-22 என்ற செட் கணக்கில் ஐ.ஓ.பி. அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் ஜேப்பியார் கல்லூரி அணி 25-21, 25-20, 25-11 என்ற நேர்செட்டில் பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பரிசளிப்பு விழாவில் டாக்டர் அஜித்போஸ் கலந்து கொண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சுழற்கோப்பையை வழங்கினார். தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் முகமது ஜின்னா, அசோசியேட் செயலாளர் ஜெ. நடராஜன், பிரபாகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
64-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சுங்க இலாகா அணி 20-25, 31-29, 25-22, 25-22 என்ற செட் கணக்கில் ஐ.ஓ.பி. அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் ஜேப்பியார் கல்லூரி அணி 25-21, 25-20, 25-11 என்ற நேர்செட்டில் பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பரிசளிப்பு விழாவில் டாக்டர் அஜித்போஸ் கலந்து கொண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சுழற்கோப்பையை வழங்கினார். தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் முகமது ஜின்னா, அசோசியேட் செயலாளர் ஜெ. நடராஜன், பிரபாகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment