சென்னை, டிச.8–
சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின்போது சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார். அவர் 110–வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார். 2 மணிக்குள் விவாதத்தை முடிக்க வேண்டிய இருப்பதால் தன்னை தொடர்ந்து பேச அனுமதிக்கும்படி மு.க.ஸ்டாலின் கேட்டார். இதற்கு ஆதரவாக தி.மு.க. உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.
தொடர்ந்து அமளி ஏற்பட்டது. பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, ஒரு வார்த்தையை குறிப்பிட்டார். இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதையடுத்து தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் முதலில் வெளியேற்றப்பட்டார். பின்னர் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
0 comments :
Post a Comment