நெய்ரோபி, டிச.3- 

கென்யாவின் மேன்டிரா கவுண்டியில் இருந்து 10 மைல் தொலைவில் குவாரி உள்ளது. இந்த குவாரியில் பணியாற்றிய தொழிலாளர்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ள கூடாரத்தில் நேற்று முன்தினம் இரவு தூங்கிக்கொண்டு இருந்தனர். 
கென்யாவில் குவாரி தொழிலாளர்கள் 36 பேர் சுட்டுக்கொலை
அங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்மமனிதன் நள்ளிரவில் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தினார். மேலும் 4 பேரை தலையை துண்டித்து படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தில் மொத்தம் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை மேன்டிரா கவுண்டியின் கவர்னர் அலி ரோபா உறுதி செய்துள்ளார். 

கென்யாவின் அண்டை நாடான சோமாலியாவில் அல் சஹாப் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் வகையில் கென்யா கடந்த 2011-ம் ஆண்டு தனது படையை அனுப்பி உள்ளது. இதில் இருந்து கென்யா நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் பஸ்சில் சென்ற 28 பேரை தீவிரவாதிகள் கொலை செய்தது நினைவுகூரத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top