பாட்னா, டிச.2-

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் அருகேயுள்ள பரிக்‌ஷிட்கர் மாவட்டத்தில் உள்ள நகர பஸ் நிலையத்தில் நேற்று ஏராளமான மக்கள் பஸ்களுக்காக காத்திருந்தனர்.
பஸ் நிலையம் அருகே பைக்கில் ஸ்டண்ட் சாகசம்: தட்டிக் கேட்டவர் சுட்டுக் கொலை
அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் பஸ் நிலையத்தினுள் நுழைந்த 3 பேர் ஒருவர் மாற்றி ஒருவர் அந்த பைக்கில் ஏறி, சினிமாக்களில் வருவது போல் சரிந்தபடி ஓட்டுவதும், முன் சக்கரத்தை வானத்தை நோக்கி உயர்த்தியபடி ஒற்றை சக்கரத்தில் வண்டியை ஓட்டுவதுமாக ‘ஸ்டண்ட்’ சாகசம் செய்யத் தொடங்கினார்கள்.

இதைக் கண்டு பெண்களும், குழந்தைகளும் பயந்து ஓடத் தொடங்கினார்கள். அப்போது, பஸ்சுக்காக காத்திருந்த சிலர், ’பொதுமக்கள் கூடியிருக்கும் இடத்தில் இதைப்போன்ற அச்சமூட்டும் செயல்களில் ஈடுபடுவது முறையா?’ என தட்டிக் கேட்டனர்.

இதனால் பைக்கில் சாகசம் நிகழ்த்தியவர்களுக்கும், தட்டிக் கேட்ட நபர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பைக்கில் வந்தவர்களில் ஒருவர் நியாயம் பேசிய நபர்களை நோக்கி திடீரென்று துப்பாக்கியால் சுட்டார். இதைக் கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டபடி பஸ் நிலையத்தை விட்டு வெளியே ஓடினார்கள்.

வெறித்தனமாக அவர் தொடர்ந்து சுட்டதில் அவர்களை தட்டிக் கேட்ட ஒரு நபர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். குண்டு காயமடைந்த மேலும் இருவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் மூவரை தேடி வருகின்றனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top