சென்னை, டிச.2–
தமிழகத்தில் உயர் அதிகாரிகளாக பணிபுரியும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மின்வாரிய நிர்வாக இயக்குனர் மற்றும் கூடுதல் தலைமைச்செயலாளராக இருந்த கே.ஞானதேசிகன் தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விஜிலன்ஸ் மற்றும் நிர்வாக சீர்திருத்த இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
இதுவரை தலைமைச்செயலாளராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் அண்ணா மேலாண்மை பயிற்சி மைய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்த பொறுப்பை இறையன்பு கவனித்து வந்தார்.
ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் முதன்மை செயலாளராக இருந்த என்.எஸ்.பழனியப்பன் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய்த்துறை செயலாளராக இருந்த கன்தீப்சிங் பேடி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நகர்ப்புறம் மற்றும் ஊரக வளர்ச்சி கமிஷனராக இருந்த ஆர்.வெங்கடேசன் வருவாய்த்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் நலம், விளையாட்டுத்துறை முதன்மை செயலாளராக இருந்த நசிமுதீன் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அரசு தகவல் சேகரிப்பு மைய கமிஷனராக இருந்த தர்மேந்திர பிரதாப்யாதவ் அரசு வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை செயலாளராக இருந்த மோகன் பியாரே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா மேலாண்மை பயிற்சி மைய இயக்குனராக இருந்த இறையன்பு பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை கலெக்டராக இருந்த சி.மனோகரன் வேளாண் விற்பனை துறை இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பொதுப்பணித்துறை முதன்மை செயலாளராக இருந்த சாய்குமார் தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் உற்பத்தி-வினியோக துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இதுபோல் நிரஞ்சன் மார்டி, நிர்மலா ஐ.ஏ.எஸ்.ஆகியோரும் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment